உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு ஆளுநரின் இப்தார் காத்தான்குடியில்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டோ சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், மௌலானா, முஷாரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சமமேளனம், ஜம்மியத்துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு மூலிகைக் கஞ்சி

இரண்டாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பு

இல்ல விளையாட்டு போட்டியால் உயிரிழந்த வவுனியா முஸ்லிம் பாடசாலை மாணவர்கள்!