உள்நாடுபிராந்தியம்

கிணற்றில் வீழ்ந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம்

பொல்பிதிகம, பதிரென்னகம பகுதியில் கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் சிகிச்சைக்காக பொலிபிதிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த குழந்தை வெல்பிட்டிய, மொரகொல்லாகம பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனாகும்.

மேலும் விசாரணையில், அவன் தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்தது தெரிய வந்தது.

சடலம் பொல்பிதிகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அழைப்பு.

அநுர இன்று முழு நாட்டிலும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளார் – அவர்களால் ஒரு பல்கலைக்கழகமும் இன்று மூடப்பட்டுள்ளது – சஜித்

editor

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

editor