உள்நாடு

காலநிலையில் மாற்றம்

(UTV|கொழும்பு) – மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(06) இரவு மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியள்ளது.

சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 தொடக்கம் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவிற்கு மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியள்ளது.

Related posts

கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

editor

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

கனேமுல்ல சஞ்சீவவைக் கொன்ற துப்பாக்கிதாரி – படம் வௌியானது

editor