உள்நாடு

காட்டு யானையை தீ வைத்து எரித்த மூவர் கைது!

மிஹிந்தலை, சீப்புக்குளம், அம்பகஹவல பகுதியில் காட்டு யானை ஒன்று எரிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து மிஹிந்தலை பொலிஸார் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

அதன்படி, காட்டு யானைக்கு தீ வைத்த குற்றத்துக்காகவும் விலங்குகளை துன்புறுத்திய குற்றத்துக்காகவும், அதே பகுதியைச் சேர்ந்த 42, 48 மற்றும் 50 வயதுடைய மூன்று பேரை மிஹிந்தலை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (18) அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்த யானையின் மரணம் குறித்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய் மற்றும் தீக்காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக இறந்தது என்று முடிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சபாநாயகர் அதிரடி அறிவிப்பு!

editor

வீடியோ | நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது – போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

IMF தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்கள் இன்று முதல்