உள்நாடு

களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு

(UTV | களுத்துறை) –    களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை அல்விஸ் பிளேஸ் நீர் குளத்தில் அத்தியவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பொத்துப்பிடிய, மொறொந்துடுவ, நாகொட,பொம்புவல, பிலமினாவத்தை மற்றும் வஸ்கடுவ போன்ற சில பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி களுத்துறை மாவட்டத்தை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் வழங்கல் தடைப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி

Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா ? இல்லையா ? சாணக்கியன் கேள்வி

editor

கொழும்பில் 18 மணி நேர நீர் விநியோகம் தடை