உள்நாடுபிராந்தியம்

கல்குடா, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் 78வது சுதந்திர தின நிகழ்வு 

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளரர் ஏ.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செச்சலாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாறூக், பிரதித்திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், அலுவலக உத்தியோகத்தர்கள், சர்வ மதத்தலைவர்கள், பிரதேச சமுக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச திணைக்களங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளரினால் தேசிய கொடியேற்றப்பட்டதுடன், தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. நாட்டுக்காக உயிர்நீர்த்த தேசிய வீரர்களுக்காக மெளனப்பிரார்த்தனையும் இடம்பெற்றது. 

அத்துடன், ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலய மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கலந்து கொண்டவர்களுக்கு பாற்சோறு வழங்கப்பட்டதுடன் நிகழ்ச்சிகளை செய்த பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கழும் வழங்ப்பட்டன.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு

கைதிக்கு தொலைபேசி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

editor