உள்நாடு

கற்குழியில் நீராட சென்ற தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலி.

திஸ்ஸமஹாராம கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு (21) தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த கற்குழியில் நேற்று பிற்பகல் தாயும் இரண்டு பிள்ளைகளும் நீராட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

 Dr ஷாபி சிஹாப்தீன் மீண்டும் கடமையில்

களனி பல்கலைகழக 9 மாணவர்களுக்கு பிணை

சாணக்கியன் எம்பியின் கருத்துக்கள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிடப்படும் என்கிறார் இனிய பாரதி

editor