உள்நாடு

கம்பஹா மாவட்ட சில பகுதிகளில் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று(09) பிற்பகல் 4 மணி முதல் 14 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஏக்கல, கொட்டுகொட, கட்டுநாயக்க, சீதுவை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், மினுவாங்கொடையின் சில பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

ஜா-எல மார்க்கத்தின் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுகின்றது.

இன்று பிற்பகல் 4 மணி முதல் நாளை அதிகாலை 6 மணிவரையான 14 மணிநேரம், குறித்த பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

பெற்ற தாய்யை தேடும், ஜேர்மனில் வசிக்கும் இலங்கை பெண்

இலங்கை ஹலால் நிறுவனம்- தாய்லாந்து இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சி- டொலர் வருமானத்தை ஏற்படுத்த தீவிரம்