உள்நாடு

கம்பஹாவிற்கு 6 மணி நேர நீர்வெட்டு

(UTV |  கம்பஹா) – சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக நாளை(23) காலை 9 மணி முதல் 6 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பேலியகொட, வத்தள, ஜாஎல, கட்டுநாயக்க/சீதுவ ஆகிய நகர சபை பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் களனி, வத்தள, பியகம, மஹர, ஜாஎல பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒன் அரைவல் விசா இரத்து

லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமைக்கு

ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்