உள்நாடுபிராந்தியம்

கண்டி காட்டுப் பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு

கண்டி, பல்லேகலை முதலீட்டு வலையத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கம்பியைப் பயன்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொறி ஒன்றில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பான ஓரிடத்தில் அதனை விடுவித்தனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக ரன்தெனிகல வன ஜீவ ராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற குழுவினர் மேற்படி சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை பொறியில் இருந்து மீட்டெடுத்துள்ளனர்.

பின்னர் ரந்தெனிகல பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் விடுவித்தனர். வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்தியர் அக்கலங்க பினிதிய தலைமையிலான குழுவினரே மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் 6 – 7 வயது மதிக்கத்தக்க நன்கு வளர்ந்த மேற்படி ஆண் சிறுத்தைக்கு எது வித உற்காயங்களும் இருக்கவில்லை என்றும், எனவே அதன் வெளிக்காயங்களுக்கு மட்டும் அவசியமான சிகிச்சையை வழங்கி அதனை காட்டில் விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ஒருபோதும் கபட அரசியலில் ஈடுபட மாட்டோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

இலங்கை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

editor

அரச வேலை வாய்ப்பு – தெரிவு செய்யப்படாத பட்டதாரிகளுக்கு அறிவித்தல்