உள்நாடு

கட்டாருக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றார்

கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் ஆவார்.

இலங்கையில் வெளியுறவு சேவை அதிகாரியாக 27 ஆண்டுகள் சேவை அனுபவத்தைக் கொண்ட சித்தாரா கான், 1998 ஆம் ஆண்டு வெளியுறவு சேவையில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் உட்பட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ள அவர், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சித்தாரா கான், கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார்.

Related posts

சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்

இன்று நள்ளிரவு முதல் விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

‘நாம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்’