உள்நாடு

கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை காணப்படுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு மலைச்சரிவு பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதியில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, கடற்றொழிலில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொங்கு பாலத்தின் 75% பயணம் முடிந்தது – கட்சி நிற பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்

ஜீவன் தொண்டமான் இங்கிலாந்து அமைச்சர்களுடன் கலந்துரையாடல்!