உலகம்

கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

(UTV|சீனா )- சீனா ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இந்தநிலையில், ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 11 பேர் வைரசால் பலியானதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருட காலம் சிறைத்தண்டனை

editor

இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் – காசாவில் போர் நிறுத்தம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

editor

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,355 ஆக உயர்வு