உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் கைது

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி குளியாபிட்டியவில் 85 பேரும், மத்தளையில் 78 பேரும், கண்டியில் 66 பேரும், கம்பளையில் 64 பேரும், புத்தளத்தில் 50 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் நபர்களை அடையாளம் காண சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

Related posts

MSC Messina : இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

மனோ கணேசன் எம்.பியை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

editor

மேலும் 16 பேர் குணமடைந்தனர்