தனது வீட்டில் வசித்து வந்த பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணச் சம்பவம் இன்று (15) வியாழக்கிழமை காலை வேளையில் தெரியவந்துள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 1 ஆம் வட்டாரம் பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்னொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்