உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | ஒலுவிலில் மீட்கப்பட்ட குழந்தையின் தாயும், தந்தையும் விளக்கமறியலில்

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு புதன்கிழமை (1) அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்க மறியலில் வைக்கமாறு உத்தரவிடப்பட்டார்.

மேலும்  17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) பெற்றெடுத்திருந்தனர்.

இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை, தாய் இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது  இருவரையும்  ஒக்டோபர் மாதம்  3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடபட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-பாறுக் ஷிஹான்

வீடியோ

Related posts

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

உயர்தர பரீட்சை குறித்து வௌியான அறிவிப்பு

editor

நாளை முதல் புதிய ஸ்டிக்கர் முறைமை