உள்நாடு

ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் இருவர் கைது

(UTV |கொழும்பு ) – சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் புத்தளம் பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நேற்று(10) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 229 சிகரட் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது

குறித்த சிகரட் பொதிகளில் காணப்பட்ட 45,800 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

புதிய சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கமில்லை – அருட்தந்தை சிறில்காமினி.

மரண செய்தியோடு, இலங்கை அரசுக்கு கிடைத்த ரைசீ அனுப்பிய பரிசுப்பொருள்!

சஜித்துடன் இணைந்த சேவ லங்கா மஜீத் – பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக நியமனம்