உள்நாடு

ஐஸ் போதைப்பொருட்களுடன் 24 வயதுடைய யுவதி கைது

அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மிஹிதுபுர பகுதியில் இருபது கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்களுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சனிக்கிழமை (03) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் 20 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட 24 வயதுடைய யுவதியொருவர் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான குரல் பதிவு தொடர்பில் தௌிவுபடுத்திய பொலிஸ் தலைமையகம்

editor

UPDATE – நிலைமை மோசமாகிறது STF, கலகம் அடக்கும் படையினர் குவிப்பு : எதுக்கும் அடங்காத ஆர்ப்பாட்டக்காரர்கள்

பரீட்சைகள் திணைக்களத்தில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவலம்!