அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற குழு அல்லது இதே போன்ற பொறிமுறையின் மூலம் பணியாற்றவும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் பொதுவான பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி, நீண்ட காலமாக கலந்துரையாடி வருகிறது.

அந்தக் கலந்துரையாடல்களின் இணக்கம் ஏற்பட்ட விடயங்களை தொடர்ந்து செயல்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிப்படையாகப் பணியாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் – பசில் ராஜபக்‌ஷ

தங்காலை கார்ல்டன் இல்லத்தில் மஹிந்தவை சந்தித்த ரணில்

editor

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த லொறி விபத்தில் சிக்கி தீப்பற்றியது – மூன்று பேர் காயம்

editor