உள்நாடுபிராந்தியம்

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – ஜீப் வண்டியின் சாரதி கைது

15 பேர் உயிரிழந்த எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

A/L பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் மனோ, பாரத் கலந்துரையாடல்

editor

பாம் எண்ணெய் தடையும் மல்லுக்கட்டும் சிற்றூண்டி உற்பத்திகளும்