உள்நாடு

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுலாகும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை என்பது தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பொறுப்பான அமைச்சர் முன்னர் தெரிவித்ததாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அமைச்சரின் வாக்குறுதியின்படி விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசியல் படம் காட்டாமல் சட்டத்தை முறையாக பயன்படுத்துங்கள் – சஜித் பிரேமதாச

editor

சகல ஊடகங்களுக்கும் நன்றி – சுகாதாரத் துறையினருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

அனைத்து மதுபான நிலையங்களும் பூட்டப்பட வேண்டும்