உள்நாடு

எரிபொருள் விலை குறைத்தாலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு லிட்டர் டீசல் விலை 307 ரூபாயை எட்டினால் மட்டுமே பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


பஸ் கட்டண தேசிய கொள்கைகளுக்கு அமைய, 4 சதவீதமான எரிபொருள் குறைப்புக்கு மாத்திரமே கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியும் எனவும் நேற்றைய தினம் டீசல் விலை 2.5 சதவீதமே குறைக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ஒதுக்கப்பட்ட காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை!

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு