உள்நாடு

எரிபொருளுக்காக புதிய QR முறைமை

(UTV | கொழும்பு) – சுற்றுலா எரிபொருள் பாஸ் மற்றும் வாகனம் அல்லாத வகை பாஸ் ஆகியவை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் பாஸ் QR குறியீடு அமைப்பு இன்று (7) காலை அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனான கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்தார்.

விசேட பிரிவினருக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு இந்த வாரத்தில் தெரிவு செய்யப்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பரிசோதிக்கப்படும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

தேசிய எரிபொருள் பாஸை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் எரிபொருளைப் பெறும்போது ஏற்படும் குறுந்தகவல்களுக்கு அடுத்த வாரம் முதல் எரிபொருள் நிலையக் குறியீடு சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுக்கான தானியங்கி அறிக்கைகள் இன்று (7) முதல் கிடைக்கப்பெறும்.

எரிசக்தி அமைச்சர், டாஷ்போர்டை பொதுமக்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்யும் என்றார்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் வழங்கிய முகவரி தவறானது

ரிஷாட் சார்பிலான் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

editor