உலகம்

எமது தாக்குதல் கத்தாருக்கு எதிரானது இல்லை – ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு

எமது தாக்குதல் ‘சகோதர’ கத்தாருக்கு எதிரானது இல்லை என ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தெரிவிப்பு.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில், அல் உதைத் விமான தளத்தின் மீதான ஏவுகணை தாக்குதல் கத்தாரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அப்பால் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

“இந்த நடவடிக்கை நட்பு மற்றும் சகோதர நாடான கத்தார் மற்றும் அதன் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது.

ஈரான் இஸ்லாமிய குடியரசு கத்தாருடனான அன்பான மற்றும் வரலாற்று உறவுகளை பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளது,” என்று கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

editor

கணினி பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனாவுக்காக பிரித்தானியா கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது