உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,475 பேர் கைது

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(18) காலை 06 மணி முதல் இன்றைய தினம்(19) காலை 06 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 1,475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 368 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இதுவரையிலான காலப்பகுதியில் 33,155 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரத்து 519 வாகங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தையிட்டி விகாரையை வைத்து நாடகமாடும் சில தமிழ் அரசியல்வாதிகள் – கந்தசாமி பிரபு எம்.பி

editor

எதிர்க்கட்சிக்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

தாய்த்தமிழக தொப்புள் கொடியான் விஜயகாந்த் – மனோ எம்.பி இரங்கல் செய்தி