உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 61,093 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 61,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 628 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 228 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 17,172 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது

editor

நம் சமூகம் சார் உரிமைகளுக்கு உயரிய சபையில் குரல் கொடுப்பேன் – அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor

தடைப்பட்ட ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு

editor