அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி சபை தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு, எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மேற்கொள்ள முடியும் எனவும்,  வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 12 ஆம் வரை காலி மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை

வழமைபோல் தனித்து தேர்தலில் களம் இறங்கியுள்ளோம் – டக்ளஸ் தேவானந்தா

editor