உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹகெலே பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கினியாகல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (04) பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதுடைய பரகஹகெலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கினியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிப்பு

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor

மஹிந்தவின் பயணத்தடை தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு