உள்நாடுசூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மைத்திரியின் வாக்குமூலப் பதிவு 7 அல்லது 8 [VIDEO]

(UTV|COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(07) அல்லது நாளை மறுதினம் (08) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க தயாராகியுள்ளதாக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று(06) கொழும்பு நீதிவான் நீதிமன்ற முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இரகசிய பொலிசாரினால் விசாரணை முன்னேற்ற அறிக்கையில் உள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற இன்னும் தினம் பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர்வெட்டு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு…

வேலைவாய்ப்பு அற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு