உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 80 சதவீத விசாரணைகள் நிறைவு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட 12 விசேட குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் எவ்பிஐ நிறுவனம் , அவுஸ்திரேலியாவின் பிராந்திய பொலிஸ் உட்பட சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புகளும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

“இந்நாட்டுக்கு தற்பெருமை தேவையில்லை” – சஜித்

கடல் மார்க்கமாக பறவைகள் மற்றும் ஊர்வன கடத்தல்.

புதிய அஸ்வெசும விண்ணப்பங்கள் இன்று முதல்!