அரசியல்உள்நாடு

இ.தொ.கா யானை சின்னத்தில் போட்டியிடும்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.

மேலும் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

எனவே பாராளுமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, மலையகத்தின் மாபெரும் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த கூட்டணியில் மற்றும் எந்த சின்னத்தில், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் என பல்வேறு தரப்பினரால் கருத்தாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் (08) இறுதி முடிவை இ.தொ.கா உயர்பீடம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளது

Related posts

நாளை நடைபெறவுள்ள A\L பரீட்சை தொடர்பான தகவல்

நாளை 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

70 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து – 8 பேர் காயம்!

editor