உள்நாடு

இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 3147 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 5 பேருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த கடற்படை அதிகாரி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 946 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 189 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

புதிய ஆவணங்களுடன் யானைகளை பதிவு செய்ய நடவடிக்கை

ICC பந்துவீச்சு தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய மஹீஷ் தீக்ஷன

editor

ரஞ்சனிடம் நலன் விசாரிக்க பா.உறுப்பினர்கள் வெலிக்கடை விஜயம்[VIDEO]