அரசியல்உள்நாடு

இலங்கையின் ஆராய்ச்சி துறையை வலுப்படுத்த தென்னாபிரிக்கா கவனம்

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Edwin Schalk தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிவுக்கும் தென்னாபிரிக்க ஆபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துதல், நாட்டில் உற்பத்தித் துறையை வலுப்படுத்துதல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்வித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் தொடர்பிலும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

76 ஆவது சுதந்திர தினத்தன்று கைதிகளை சிறைச்சாலை பார்வையிடலாம்!

டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.310 ஆக உயர்வு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை – முன்னாள் எம்.பி. வினோ அறிவிப்பு

editor