உள்நாடு

இலங்கைக்கும் – மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகளை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகளை இன்று (28) முதல் இடைநிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

கட்டுப்பாடற்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நிலைமை மீண்டு வந்தவுடன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என நம்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பிற்கும் மாஸ்கோவிற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

editor

உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெறுவது உறுதி – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

காசாவை விட்டு 263,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!