உள்நாடு

இரா. சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், கோ.கருணாகரம் மற்றும் கலையரசன் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீதான விசாரணை கல்முனை நீதவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, குறித்த அனைவரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சைவழி பேரணியில் நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவை மீறி செயற்பட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க

editor

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்

{VIDEO} மருந்து தட்டுப்பாடு காரணமாக சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச கேள்வி