உள்நாடு

இரா. சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், கோ.கருணாகரம் மற்றும் கலையரசன் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீதான விசாரணை கல்முனை நீதவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, குறித்த அனைவரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சைவழி பேரணியில் நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவை மீறி செயற்பட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் : 63 பேர் மீண்டும் விளக்கமறியலில்

சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

பேருந்து விபத்தில் 24 மாணவர்கள் வைத்தியசாலையில் [PHOTOS]