சூடான செய்திகள் 1

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரியா லியனகே நியமனம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக கடமையாற்றி வந்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலை அடுத்து, மேல் மாகாண மற்றும் புத்தளம் மாவட்ட இராணுவ, விமானப்படை, கடற்படை, பொலிஸ் பிரிவுகள் யாவும் கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய வீடு – பார்வையிட திரளும் மக்கள்

editor

தேயிலை தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம்: சகோதரரின் கனவர் தப்பியோட்டம்