உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

அருள்மிகு ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (31) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இடம் பெறவுள்ளது.

இரத்தினபுரி சிவன் கோவிலிலும் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் வரும் விசர்ஜன விநாயகர் வாகனங்களுடன் அணிவகுத்து ஊர்வலமாக திருவானக்கெட்டிய ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பிரதான வீதி வழியாக இரத்தின சபேஷ்வரர் சிவன் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு விசேட பூஜைகள், பஜனை, சிறப்பு சொற்பொழிவுகள் என்பன இடம்பெற்று அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

பின்னர், பிரதான வீதி வழியாக புலுங்குபிடிய பாலத்துக்கருகில் ஓடும் களுகங்கையில் மதியம் 03 மணிக்கு விநாயகர் சிலைகள் விஷர்ஜனம் (தீர்த்த விழா) நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விசேட பூஜைகள் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவுள்ள ஆலயங்கள், அறநெறிகள், இந்து அமைப்புகள் அனைவருக்கும் 108 விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்து கையளிக்கப்பட்டுள்ளது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

நாட்டில் இன்று 44 கொவிட் மரணங்கள் பதிவு

பாட்டாளி வர்க்க அரசாங்கம், நவ லிபரல் அரசாங்கத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது – சஜித் பிரேமதாச

editor

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா