சூடான செய்திகள் 1

இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் நாளை முதல்

(UTV|COLOMBO)-சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட பணிகள் நாளை தொடக்கம் எதிர்வரும் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

திருத்தப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 26 பாடசாலைகளில் 4 பாடசாலைகள் குறித்த காலப்பகுதியில் முழுமையாக மூடப்படவுள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் மற்றைய 22 பாடசாலைகளும் பகுதியளவில் மூடப்படவுள்ள நிலையில் , குறித்த பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் வழமைப்போல் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

Related posts

பேராதனை பூங்காவின் வருமானம் 4 கோடி 20 லட்சம் ரூபா

சில பிரதேசங்களுக்கு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இலங்கை முஸ்லீம்கள்: ஒரு பார்வை!