உள்நாடு

இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை

(UTV|கொழும்பு ) – நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள், சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய போதியளவான நீரை பருக வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வறட்சி காலநிலை ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts

கொரொனோ – பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு

பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor