சூடான செய்திகள் 1

இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை

(UTV|COLOMBO) பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்களை ஏற்படுத்தி கொள்ளாது இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் பெற்றோர்களிடம் கோரியுள்ளனர்.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அச்சமின்றி சகல மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

Related posts

கண்டி நகரத்தில் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்