காலநிலை

இன்று முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இன்று மற்றுமொரு தாழமுக்கம் உருவாக வாய்ப்பு – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor

இடியுடன் கூடிய மழை – பலத்த மின்னல் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

editor

இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை

editor