சூடான செய்திகள் 1

இன்று மீண்டும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடுகிறது

(UTV|COLOMBO)  இன்று (13ஆம் திகதி) உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு  பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K. இலங்ககோன் ஆகியோர் இன்று பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரும் இன்று தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விஷேட சலுகையை தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்”

குருநாகல் மாவட்டத்தில் அரச வெசாக் வைபவம்

லொறி விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயம்