உள்நாடு

இன்று இரவு மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் இரவு நேரத்தில் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A,B மற்றும் C முதலான வலயங்களுக்கு மாத்திரம், இன்று பகல் நேரத்தில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், நாளை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பு நேர அட்டவணையின்படி, அந்தந்த பகுதிகளில் மின்துண்டிப்பு அமுலாகக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால், சில மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளமையால், மின்துண்டிப்பை அமுலாக்க நேரிட்டுள்ளது.

Related posts

நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

யுத்தத்தின் போது அம்பாறை கனகர் கிராமத்தில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் – கிழக்கு ஆளுநர் நடவடிக்கை

தேர்தல் முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு