உள்நாடு

இன்றும் மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) –  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (06) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

   

Related posts

ரிஷாத் – ரியாஜ் தற்கொலை குண்டு வீச்சாளர்களுக்கு உதவியமைக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்

தொடரும் பலத்த மழை – சிவப்பு எச்சரிக்கை

editor