உள்நாடு

இன்றும் எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – மற்றுமொரு நபர் ஒருவர் இன்று(21) மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 76 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (20) கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற 70 வயதுடைய நபர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று முன் தினம் (19) கண்டியில் எரிபொருள் வரிசையில் மண்ணெண்ணெய் பெற வரிசையில் காத்திருந்த நபரும் தவறி விழுந்து உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பூவெலிகட இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்தின் உரிமையாளர் கைது

‘ஜனாதிபதி பதவி விலகல்’ : ஜனாதிபதியின் ஊடகத் தொடர்பாளர் மறுப்பு

வைத்தியர்களின் வேலை நிறுத்த தீர்மானம் நியாயமற்றது – அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ

editor