உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அவ்வறிவித்தல் இன்று (04) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் நிலவுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துர திலீப இராஜினாமா

editor

77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர ஆற்றிய முழுமையான உரை தமிழில்

editor

முட்டை விலையும் அதிகரிப்பு