உள்நாடு

இசை நிகழ்ச்சியில் 31 இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

500க்கும் மேற்பட்டோர் இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

“சேலைன் கூட ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே”

கொரோனாவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor