வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்தில் தீவிரவாதத் தாக்குதல் – பலர் பலி – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் குறைந்த பட்சம் 19 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்செஸ்டரில் உள்ள மண்டபம் ஒன்றில், பாடகி அரியானா க்ராண்டேயின் இசை நிகழ்சி ஒன்று இடம்பெற்று நிறைவடைந்தப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குண்டுவெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகின்ற போதும், இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

எனினும் இதனைத் தீவிரவாத் தாக்குதலாக கருதுவதாக இங்கிலாந்தின் வடமேற்கு தீவிரவாத முறியடிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ot-video][/ot-video]

[ot-video][/ot-video]

Related posts

சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை விலக்கியமை தொடர்பில் குற்றச்சாட்டு

Deshapriya wins bronze medal in Asia Para TT championships

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை