உள்நாடு

ஆளில்லா விமானத் தாக்குதல் – அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –

ஜோர்டான் நாட்டில் முகாம்களில் தங்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது திடீரென ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்து உள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பைடன் உறுதி கூறியுள்ளார். காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் எதிரி படைகளால் அமெரிக்க வீரர்கள் கொல்லப்படும் முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தென்கிழக்குப் பல்கலைக் கழக  பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நளீர்  

Dilshad

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு : அமைச்சரவைப் பத்திரம் இன்று

இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில்..