உள்நாடு

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – இதுவரையில் தீர்க்கப்படாத தங்களது சம்பள பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து, இன்று(25) கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம், அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்திருந்தார்.

சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 45 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில், இன்று ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் கூடி தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து அறிவிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

   

Related posts

“முஸ்லிம்களுக்கு கிடைத்த ரமலான் மாத பேரீச்சம்பழத்தில் முறைகேடா?” முஸ்லிம் கலச்சார அமைச்சு பதில்

கல்வி அமைச்சின் ஆலோசனைகளில் திருத்தங்கள்

உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டம்

editor